5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

உள்ளாடை விளம்பரங்களில் இனிமேல் நடிக்க வேண்டாம்: கங்குலிக்கு அறிவுரை கூறும் அரசியல்வாதி!

உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பதை கங்குலி தவிர்க்க வேண்டும்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 1:33 pm IST

ஐசிசி தலைவர் பதவிக்குத் தேர்வாக வாய்ப்புள்ள செளரவ் கங்குலி, இனிமேல் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பிஸ்வரூப் டே கூறியுள்ளார்.

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) தேர்வாகவுள்ளார். 

இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு செளரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான பிஸ்வரூப் டே கூறியதாவது:

ஐசிசி தலைவராக கங்குலி தேர்வானால் மகிழ்ச்சியே. அதேசமயம் அவருக்கு ஓர் அறிவுரை கூறுகிறேன். ஐசிசி தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால் அதன்பிறகு உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பதை கங்குலி தவிர்க்க வேண்டும். அதுபோன்ற விளம்பரங்கள் கிரிக்கெட் நிர்வாகியான அவருக்குப் பொருத்தமாக இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.