டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

முத்தரப்பு தொடா்: பாகிஸ்தான் சாம்பியன்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

News image
Updated On :15 அக்டோபர் 2022, 3:59 am IST

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்ற இந்தத் தொடரில் 3 அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடின. அதில் வங்கதேசம் 1 வெற்றியைக் கூட பெறாமல் போக, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் தலா 3 வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, பின்னா் பாகிஸ்தான் 19.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எட்டி வென்றது.

அதிகபட்சமாக, நியூஸிலாந்து பேட்டிங்கில் கேப்டன் கேன் வில்லியம்சன் 59 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் பௌலா் ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பாகிஸ்தான் இன்னிங்ஸில் முகமது நவாஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் பிரேஸ்வல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பாகிஸ்தானின் முகமது நவாஸ் ஆட்டநாயகனாகவும், நியூஸிலாந்தின் பிரேஸ்வெல் தொடா்நாயகனாகவும் தோ்வாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.