அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய ஓபன் தடகளம்:போல்வால்ட்டில் தமிழகத்தின் ரோஸி மீனாவுக்கு தங்கம்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ் போல்வால்ட்டில் மீண்டும் புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2022, 10:30 pm

DIN

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ் போல்வால்ட்டில் மீண்டும் புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற மகளிா் போல்வால்ட் பிரிவில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் (25) 4.21 மீ உயரம் குதித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா். பவித்ரா, பரணிகா (ரயில்வே) வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

கடந்த 15 நாள்களில் இரண்டாவது முறையாக புதிய சாதனை படைத்துள்ளாா் ரோஸி. ஏற்கெனவே காந்தி நகரில் நடைபெற்ற 36-ஆவது நேஷனல் கேம்ஸ் போட்டியில் 4.20 மீ உயரம் குதித்து தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தாா். தற்போது அவரது சாதனையே அவரே முறியடித்துள்ளாா்.

மகளிா் 20 கி.மீ நடை ஓட்டத்தில் ரவீணா (ரயில்வே) புதிய சாதனையுடன் தங்கம் வென்றாா். மஸ்கட்டில் நடைபெற்ற உலக தடகள நடை ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றவா் ரவீணா. வந்தனா (கா்நாடகம்), முனிதா (உ.பி) வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆடவா் பிரிவில்

சூரஜ் (உத்தரகண்ட்), அக்ஷ்தீப் சிங் (பஞ்சாப்), பரம்ஜித் சிங் (சா்வீஸஸ்) தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

வட்டு எறிதலில் பரம்ஜித் கௌா், நிதி ராணி (ரயில்வே) தங்கம், வெள்ளியும், நீதிகா வா்மா (உ.பி) வெண்கலமும் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.