டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபிய அணி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் தொடங்கியது. குரூப் ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இலங்கை - நமீபிய அணிகள் மோதுகின்றன.
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் நமிபீயா அணி 163 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது. ஆரம்ப பேட்டர்கள் சீக்கரமாகவே அவௌட் ஆகி வெளியேறினர். பவின்சர் பந்துகளில் அதிக விக்கெட்டுகளை இழந்தனர். இதில் அதிகபட்சமாக ஜே ஜே ஸ்மிட் 16 பந்துகளில் 31 ரன்களும், ஃப்ரிலின்க் 28 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் மதுஷன் 2 விக்கெட்டுகளும், தீக்ஷனா, சமீரா, கருனாரத்னே, ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக இலங்கை கேப்டன் தசுன் ஷனகா 29 ரன்களும், ராஜபக்ஷா 20 ரன்களும் எடுத்தனர்.
நமீபியா அணி சார்பில் ஜே ஸ்மிட் 1 விக்கெட்டும், டேவிட் வைஸ்ஸி, பென் ஷிகோங்கோ, ஜான் ஃப்ரைலின்க், பெர்னார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
ஜான் ஃப்ரைலின்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.