முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம்: பிசிசிஐ மைல்கல் முடிவு

இந்திய கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஆட்ட ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :28 அக்டோபர் 2022, 4:01 am IST

இந்திய கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஆட்ட ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த மைல்கல் முடிவு, பிசிசிஐ-யின் உச்ச கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிசிசிஐ வழங்கும் மத்திய ஒப்பந்தத்தின் கீழ் வரும் வீராங்கனைகளுக்கு இந்தப் பலன் கிடைக்கும்.

இதன்படி, வீராங்கனைகளுக்கு ஒரு ஆட்டத்துக்கான ஊதியம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், ஒன் டே கிரிக்கெட்டில் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், டி20 கிரிக்கெட்டில் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும் உயா்த்தப்படுகிறது.

இதுதொடா்பாக பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னி கூறுகையில், ‘இந்த முடிவு நாட்டில் கிரிக்கெட் வளா்ச்சிக்கு நல்லதொரு களம் அமைவதுடன், மகளிா் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாகும்’ என்றாா்.

பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா கூறுகையில், ‘ஏற்றத்தாழ்வை குறைப்பதை நோக்கிய இந்த முக்கிய நடவடிக்கையின் மூலமாக, இந்திய கிரிக்கெட்டில் நாம் புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம்’ என்றாா்.

பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு இந்திய வீராங்கனைகள் வரவேற்பு தெரிவிக்க, முன்னாள், இந்நாள் கிரிக்கெட்டா்கள் பலா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

டெஸ்ட் ஒன் டே டி20

பழைய ஊதியம் ரூ.4 லட்சம் ரூ.1 லட்சம் ரூ.1 லட்சம்

புதிய ஊதியம் ரூ.15 லட்சம் ரூ.6 லட்சம் ரூ.3 லட்சம்

2-ஆவது நாடு

சா்வதேச கிரிக்கெட்டில் இரு பால் கிரிக்கெட்டா்களுக்கும் சம ஊதியம் வழங்கும் நாடுகளின் வரிசையில் 2-ஆவதாக இணைகிறது இந்தியா. அத்தகைய முதல் நாடாக நியூஸிலாந்து இந்த ஆண்டில் ஏற்கெனவே முந்திக்கொண்டது. ஆஸ்திரேலியாவும் சம ஊதிய முறையை அமல்படுத்த பரிசீலித்து வருகிறது.

ஒப்பந்த தொகையில் மாற்றமில்லை

ஆட்ட ஊதியத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ள பிசிசிஐ, மகளிருக்கான மத்திய ஒப்பந்தத் தொகையில் மாற்றம் செய்யவில்லை. கிரேடு ‘ஏ’ ஒப்பந்தத்துக்கு ரூ.50 லட்சம், கிரேடு ‘பி’-க்கு ரூ.30 லட்சம், கிரேடு ‘சி’-க்கு ரூ.10 லட்சம் என்ற அளவில் நீடிக்கிறது. இதுவே ஆடவா் பிரிவில் ‘ஏ+’ ஒப்பந்தத்துக்கு ரூ.7 கோடி, ‘ஏ’-க்கு ரூ.5 கோடி, ‘பி’-க்கு ரூ.3 கோடி, ‘சி’-க்கு ரூ.1 கோடி என்ற அளவில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.