ஆசியக் கோப்பையின் முக்கியமான போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (செப்டம்பர் 1) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட் செய்து 183 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மெகதி ஹாசன் 38 ரன்கள், ஹொசைன் 39 ரன்கள், மொசடக் ஹொசைன் 9 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி முதலில் அட்டசகாமாக விளையாடியது. நிஷாங்கா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். குஷால் மெண்டிஸ், கேப்டன் ஷனகா ஜோடி சேர்ந்து அருமையாக விளையாடினர். திடீரென மீண்டும் விக்கெட் விழத்தொடங்கியது. மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஹசரங்காவும் உடனே ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனகா 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சமிகா கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன்னவுட் ஆகிவிட்டார். பெர்னாண்டோ 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார்.

வங்கதேச அணியின் சார்பாக ஹொசைன் 3 விக்கெட்டுகளும், டஷ்கின் அஹமது 2 விக்கெட்டுகளும் மெஹதி ஹாசன், முஷ்தபிஷூர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். கடைசி நேரத்தில் வங்கதேச அணி பவுலர்கள் மோசமாக பந்து வீசினர்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துபையில் நடந்த போட்டியில் இதுதான் இலங்கையின் அதிகபட்ச சேஸிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. 60 ரன்கள் எடுத்த குஷால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு... சொந்த ஊரில் கால்பந்து போட்டியைக் கண்டுகளித்த மெஸ்ஸி!

மூச்சு வாங்குதா மாமா? ஆச்சரியப்படுத்தும் நடிகர் சிவாஜியின் வெளிவராத விடியோ!
26 ஆண்டுகளாக... கார்கில் போர் தியாகியின் குடும்பத்திற்கு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!

வாட்ஸ் ஆப்பில் பூமர்களை தடைசெய்ய வேண்டும்: சசி தரூர் மகன் கிண்டல்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



