இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அது ஏன் இல்லை, இது ஏன் இல்லை எனக் கேட்கக் கூடாது...: உலகக் கோப்பை அணி பற்றி கவாஸ்கர்

தன்னால் எல்லா அணிகளிலும் இடம்பெற முடியாது என்பதை தெரிந்துகொள்ள இது நல்ல அனுபவமாக இருக்கும். 

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 9:21 am

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் சுநீல் கவாஸ்கர்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பை அணி பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாததால் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னோய் மனம் தளரக்கூடாது. அவர் பக்கம் வயது உள்ளது. அடுத்த சில வருடங்களில் மற்றொரு டி20 உலகக் கோப்பை வரப்போகிறது. எதிர்காலத்தில் ஏராளமான டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அவரால் விளையாட முடியும். தன்னை நீக்க முடியாதபடி இனி அவர் விளையாட வேண்டும். அவர் ஓர் இளம் வீரர். தன்னால் எல்லா அணிகளிலும் இடம்பெற முடியாது என்பதை தெரிந்துகொள்ள இது நல்ல அனுபவமாக இருக்கும். 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சரியான தேர்வாகத் தெரிகிறது. பும்ராவும் ஹர்ஷல் படேலும் மீண்டும் அணிக்குள் வந்ததால் இந்தியாவால் ஸ்கோரைத் தற்காத்துக் கொள்ள முடியும். அர்ஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்திருப்பது இந்திய அணிக்கு ஒரு இடக்கைப் பந்துவீச்சாளரைத் தந்துள்ளது. நான் கூறியது போல இது நல்ல அணியாகத் தெரிகிறது. இது சரியில்லை, அது சரியில்லை என நாம் குறை கூறலாம். ஆனால் இந்திய அணியைத் தேர்வு செய்து முடித்து விட்டார்கள். இதுதான் இந்திய அணி. அது இல்லை, இது ஏன் இல்லை எனக் கேட்க வேண்டாம். இந்த அணிக்கு 100 சதவீத ஆதரவை நாம் தர வேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.