சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் கடவுள் என்பது மட்டுமின்றி அவர் ஒரு வாழ்க்கை பயிற்சியாளர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை நாளை மறுநாள் (ஏப்ரல் 24) கொண்டாட உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது: நான் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போது பேட்டிங்கில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சச்சினிடன் தான் ஆலோசிப்பேன். அவர் எனக்கு தகுந்த தீர்வினை அளிப்பார். அவர் என்னுடைய கிரிக்கெட் கடவுள் மட்டுமல்ல, வாழ்க்கை பயிற்சியாளரும் ஆவார். நான் தனிப்பட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது அவர்தான் என்னை முதலில் அழைக்கும் நபராக இருப்பார். அவர் எனக்கானத் தீர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்குவார் என்றார்.