ஜொ்மனியில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. கடந்த 1981 முதல் இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியா்கள், இதில் சாம்பியனாவது இதுவே முதல் முறையாகும்.
காம்பவுண்ட் மகளிா் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பா்னீத் கௌா் கூட்டணி 23-229 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்ஸிகோ அணியை சாய்த்து முதலிடம் பிடித்தனா். இந்த அணி முன்னதாக, காலிறுதியில் சீன தைபேவையும் (228-226), அரையிறுதியில் நடப்பு சாம்பியனான கொலம்பியாவையும் (220-216) தோற்கடித்தது.
இந்தப் போட்டி வரலாற்றில் இதற்கு முன் அதிகபட்சமாக இந்தியா்கள், ரீகா்வ் பிரிவு இறுதிச்சுற்றில் 4 முறையும், காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் 5 முறையும் வெற்றியை இழந்தது நினைவுகூரத்தக்கது.