வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா? இறுதிப்போட்டியின் 2வது சுற்று தொடக்கம்!

உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தின் 2வது சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா? இறுதிப்போட்டியின் 2வது சுற்று தொடக்கம்!
Published on
Updated on
1 min read

உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தின் 2வது சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜா்பைஜானில் நடைபெற்றுவரும் இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் ஆா்.பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். 

நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், 2வது சுற்று போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நடைபெற்றுவரும் 2வது சுற்று ஆட்டமும் சமநிலை எட்டினால், ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ளதால், பிரக்ஞானந்தா மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com