யுவராஜ் சிங், ஹேசல் கீச் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் அறிவித்துள்ளார். மேலும் குட்டி இளவரசியை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைக்கு ஆரா என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் குடும்ப புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் புதிதாகப் பிறந்த மகளுடன் யுவராஜும், மகன் ஓரியன் உடன் ஹேசலும் உள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அனைத்துவித கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார். பின்னர் இவருக்கும், பாலிவுட் நடிகையுமான ஹேசல் கீச்சிற்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதிக்கு 2022ஆம் ஆண்டு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.