இலங்கையின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்!

இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அடுத்த ஓராண்டுக்கு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இலங்கையின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்!

இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அடுத்த ஓராண்டுக்கு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை  புதிதாக அமைத்த பிறகு, சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.  இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் நபர்கள் அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சிறப்பாக செயல்பட உதவும் பொறுப்பு ஜெயசுர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com