என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

2024-ல் ரிஷப் பந்த் வெற்றிகரமாக கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 டிசம்பர் 2023, 7:37 pm IST

இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில், அண்மைக் காலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொது நிகழ்வுகள் பலவற்றில் பங்கேற்பதைக் காண முடிந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு ஏற்பட்ட கார் விபத்து பயங்கரமானது. ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேட்டு  மொத்த உலகும் அதிர்ச்சியடைந்தது. அந்த விபத்திலிருந்து அவர் மெதுவாக குணமடைந்து மீண்டு வந்துள்ளார். அவர் முதலில் ஊன்று கோல் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார். பின்னர் சிறிய அளவில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். சிறிது கிரிக்கெட்டும் விளையாடினார். ரிஷப் பந்த்தின் இடத்தில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டார். அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் கே.எல்.ராகுல் 452 ரன்கள் குவித்தார். வருகிற 2024 ஆம் ஆண்டு ரிஷப் பந்த்துக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.