பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

2024-ல் ரிஷப் பந்த் வெற்றிகரமாக கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 7:04 pm IST

இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில், அண்மைக் காலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொது நிகழ்வுகள் பலவற்றில் பங்கேற்பதைக் காண முடிந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு ஏற்பட்ட கார் விபத்து பயங்கரமானது. ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேட்டு  மொத்த உலகும் அதிர்ச்சியடைந்தது. அந்த விபத்திலிருந்து அவர் மெதுவாக குணமடைந்து மீண்டு வந்துள்ளார். அவர் முதலில் ஊன்று கோல் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார். பின்னர் சிறிய அளவில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். சிறிது கிரிக்கெட்டும் விளையாடினார். ரிஷப் பந்த்தின் இடத்தில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டார். அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் கே.எல்.ராகுல் 452 ரன்கள் குவித்தார். வருகிற 2024 ஆம் ஆண்டு ரிஷப் பந்த்துக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.