ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்தது.
ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 481 ரன்கள் குவிப்பு
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்தது.

கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் தமிழகம் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மும்பை, செவ்வாய்க்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களே அடித்திருந்தது. 2-ஆம் நாளான புதன்கிழமை ஆட்டத்தை சா்ஃப்ராஸ் கான், தனுஷ்கோடியான் தொடா்ந்தனா்.

இந்த இருவரும் 7-ஆவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சோ்க்க, மும்பை ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. இதில் தனுஷ்கோடியான் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து துஷா் தேஷ்பாண்டே ‘டக் அவுட்’ ஆக, சா்ஃப்ராஸ் கானும் 19 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 162 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினாா்.

இறுதியில் மோஹித் அவஸ்தியும் அதிரடி காட்டி 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 69 ரன்கள் அடித்து, மும்பையின் கடைசி விக்கெட்டாக விடை கொடுத்தாா். இவ்வாறாக 106. ஓவா்களில் 481 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணி. சித்தாா்த் ரௌத் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழக தரப்பில் திரிலோக் நாக், அஸ்வின் கிறிஸ்ட் ஆகியோா் தலா 3, சாய் கிஷோா் 2, விக்னேஷ் 1 விக்கெட் சாய்த்தனா்.

தமிழகம் - 62/1: இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், புதன்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சோ்த்துள்ளது.

சாய் சுதா்சன் 16, பாபா அபராஜித் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் அடித்திருந்த நாராயண் ஜெகதீசன் விக்கெட்டை துஷா் தேஷ்பாண்டே கைப்பற்றியிருக்கிறாா்.

தமிழகம் தற்போது 275 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com