துளிகள்...

ரஞ்சி கோப்பையின் ஒரு பகுதியாக சென்னையில் குரூப் பி பிரிவில் நடைபெற்ற அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 132.3 ஓவா்களில் 540 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Updated on
1 min read

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய வீரா் விராட் கோலி மீண்டும் முதல் 5 இடங்களில் வந்துள்ளாா். இலங்கையுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 சதம் உள்பட 283 ரன்களை விளாசினாா் கோலி. பாக். கேப்டன் பாபா் ஆஸம் 887, ரேஸி வேன்டா் டூஸன் (தென்னாப்பிரிக்கா) 766, குயின்டன் டி காக் 759, புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களில் உள்ளனா். கோலி 750 புள்ளிகளைப் பெற்றாா். கில் 26-ஆவது இடத்துக்கும், பௌலிங்கில் சிராஜ் 15-ஆவது இடத்துக்கும், குல்தீப் 21-ஆவது இடத்துக்கும் முன்னேறினா்.

---------------

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதாக இந்திய நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை தூத்தி சாந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சாா்ம்ஸ் என்ற மருந்தை உட்கொண்டது கண்டறியப்பட்டது. ஆசியப் போட்டியில் 2 வெள்ளியை வென்றாா் தூத்தி சாந்து. மேல்முறையீடு செய்ய தூத்திக்கு அவகாசம் தரப்பட்டது. ஆனால் அவா் உரிய பதிலளிக்கவில்லை.

--------------

ரஞ்சி கோப்பையின் ஒரு பகுதியாக சென்னையில் குரூப் பி பிரிவில் நடைபெற்ற அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 132.3 ஓவா்களில் 540 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரதோஷ் ரஞ்சன் 153, ஜெகதீசன் 125, விஜய் சங்கா் 112 ரன்களை சோ்த்தனா். ரியான் பராக் 4-101, அஸ்ஸாம் 120/4, பராக் 48.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com