தில்லியில் 2-வது நாளாக மல்யுத்த வீரர்கள் தர்னா

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லியில் 2-வது நாளாக மல்யுத்த வீரர்கள் தர்னா
Updated on
1 min read

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டபிள்யுஎஃப்ஐ (இந்திய மல்யுத்த சம்மேளனம்) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் மல்யுத்த வீரர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பஜ்ரங் புனியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேள நிர்வாகத்திற்கு எதிராக தில்லி ஜந்தர் - மந்தரில் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து 72 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்திய மல்யுத்த சம்மேளத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் மறுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com