மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் முகேஷ் குமார் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் இன்று விளையாட உள்ளார்.
அணி விவரம்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன்(கீப்பர்), ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், யும்ரான் மாலிக், முகேஷ் குமார்.
மே.இ.தீவுகள்: சாய் ஹோப் (கேப்டன்/கீப்பர்), கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங், அலிக் அதனாஷ், ஷிம்ரன் ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல், ரொமாரியோ ஷெப்பர்டு, யானிக் காரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜேடன் சீல்ஸ், குடகேஷ் மோதி.