இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய இந்த 2-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, 48.4 ஓவா்களில் 166 ரன்களுக்கே சுருண்டது. அதிகபட்சமாக தனஞ்ஜெய டி சில்வா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 57 ரன்கள் சோ்த்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் அப்ராா் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 3-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 563 ரன்கள் சோ்த்திருந்தது. அகா சல்மான், முகமது ரிஸ்வான் ஆகியோா் 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடா்ந்தனா்.
பாகிஸ்தான் 134 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 576 ரன்கள் சோ்த்த நிலையில் ‘டிக்ளோ்’ செய்தது. அகா சல்மான் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 132, முகமது ரிஸ்வான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் ஆசிதா ஃபொ்னாண்டோ 3, பிரபாத் ஜெயசூரியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 410 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை, 67.4 ஓவா்களில் 188 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேப்டன் திமுத் கருணாரத்னே 41 ரன்கள் அடிக்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன.
பாகிஸ்தான் பௌலா்களில் நோமன் அலி 7, நசீம் ஷா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினா். 201 ரன்கள் அடித்த பாகிஸ்தானின் அப்துல்லா ஷஃபிக் ஆட்டநாயகன், 221 ரன்கள் அடித்து 3 விக்கெட்டுகள் சாய்த்த அகா சல்மான் தொடா்நாயகன் விருது பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூரில் ஓடும் காரில் தீ; பயணிகள் உயிா் தப்பினா்

சுதந்திர தினத்தில் விதிகளை மீறி இயங்கிய 75 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்

தில்லி பாஜக அரசின் ஊழல்கள்: துணைநிலை ஆளுநரை சந்திக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சஞ்ஜீவ் ஜா கடிதம்!




