அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
எம்எல்சி கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் ஜூலை 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் ஐபிஎல்லில் பங்கேற்கும் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகளின் நிர்வாகமும் அணிகளை வாங்கியுள்ளனர்.
சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) என்ற பெயரில் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சியாட்டில் ஓர்காஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பூரண் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த சியாட்டில் அணி, 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தன. அதிகபட்சமாக டி காக் 87 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின. 16 ஓவரில் வெற்றிக்கு தேவையான 184 ரன்களை எட்டி வெற்றி பெற்றன.
மும்பை அணியின் கேப்டன் பூரண் 55 பந்துகளில் 137 ரன்களை குவித்தார்.
இதன்மூலம், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியினர் வென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.