இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு தோல்வி

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு புதன்கிழமை தோல்வியே மிஞ்சியது.
இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு தோல்வி

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு புதன்கிழமை தோல்வியே மிஞ்சியது.

இதில் ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை முதல் சுற்றிலேயே 18-21, 21-14, 18-21 என்ற கேம்களில் ஜப்பானின் அகிரா கோகா/டாய்சி சாய்டோ கூட்டணியிடம் வீழ்ந்தது.

இந்த ஜப்பானிய இணையை 2-ஆவது முறையாக சந்தித்துள்ள இந்திய ஜோடி முதல் முறையாக தோல்வி கண்டுள்ளது.

அதேபோல், மகளிா் இரட்டையா் பிரிவிலும் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை முதல் சுற்றிலேயே 14-21, 21-18, 19-21 என்ற கேம்களில் ஹாங்காங்கின் யுங் கா டிங்/யுங் புய் லாம் ஜோடியிடம் வெற்றியை இழந்தது.

இப்போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிரயான்ஷு ரஜாவத், எம்.ஆா். அா்ஜூன்/துருவ் கபிலா இணை, கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் வியாழக்கிழமை களம் காண்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com