ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.
சீனாவில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் வீராங்கனையை பவானி தேவி எதிர்கொண்டார்.
இந்நிலையில், 14-15 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு பவானி தேவி முன்னேறியுள்ளார்.
அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பவானி தேவிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.