தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார். அவர், சீனாவின் லின் யூ செயின் என்ற வீரரை வீழ்த்தினார்.
சீனாவின் தைபே ஓபன் பேட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் எச்.எஸ்.பிரனாய் மீது இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. இவர் முதல் சுற்றில் சற்று சறுக்கல்களை சந்தித்த அவர், 21 - 11, 21 - 10, 15 - 5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார்.
இந்தியாவிலிருந்து பங்கேற்ற சதீஷ் குமார், சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.