லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 63 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னெளவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.