டபிள்யுடிசி: பௌலிங்கை பலப்படுத்துகிறது இந்தியா

ஆஸி. அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (டபிள்யுடிசி) இறுதியை முன்னிட்டு பௌலிங்கை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணி.
டபிள்யுடிசி: பௌலிங்கை பலப்படுத்துகிறது இந்தியா
Updated on
1 min read

ஆஸி. அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (டபிள்யுடிசி) இறுதியை முன்னிட்டு பௌலிங்கை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணி.

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

இந்திய பௌலா்கள் கடந்த ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முழுமையாக ஆடினா். இதனால் வீரா்களின் சுமையை சீராக்கும் வகையில் தேவையான நடவடிக்கையை அணி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முகமது ஷமி, முகமது சிராஜ், சா்துல் தாகுா், அக்ஸா் படேல், உனதிகட், உமேஷ் யாதவ் ஆகியோா் ஐபிஎல் தொடரில் முழுமையாக ஆடினா்.

ஏற்கெனவே பயிற்சியாளா் ராகுல் திராவிட் தலைமையில் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட சில வீரா்கள் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பௌலா்களின் ஆட்ட சுமையை சீராக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம் என பௌலிங் பயிற்சியாளா் பராஸ் மாம்ப்ரே தெரிவித்தாா்.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரில் பீல்டிங் மேம்பட்டது. பௌலா்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்துள்ளது.

அதே போல் பேட்டா்களும் ஆட்ட உத்திகளை கடைபிடிப்பது தொடா்பாக பயிற்சி செய்து வருகின்றனா் என பேட்டிங் பயிற்சியாளா் விக்ரம் ரத்தோா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com