

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 38-ஆவது ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் திங்கள்கிழமை மோதுகின்றன. புது தில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 53 முறை மோதியிருக்கும் நிலையில், இலங்கை 42 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. வங்கதேசம் 9 ஆட்டங்களில் வென்றிருக்க, 2 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.
உலகக் கோப்பை போட்டிகளில் இவரை 3 முறை சந்தித்திருக்க, அனைத்திலுமே இலங்கை வென்றிருக்கிறது. தில்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னை காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.