பாகிஸ்தான் அணியின் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இதன்காரணமாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனால் பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள், டெஸ்ட், டி-20 ஆகிய 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள பாபர் அசாம், இது மிகவும் கடினமான சூழல். ஆனால், வேறொருவர் பொறுப்பேற்பதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வீரராக பங்கேற்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.