கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இறுதிப்போட்டிக்கு முகமது ஷமியின் பயிற்சியாளர் இந்தியாவுக்கு கொடுத்த அறிவுரை!

எந்த ஒரு அணியையும் இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முகமது ஷமியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் படாருதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 நவம்பர் 2023, 1:44 pm

DIN

எந்த ஒரு அணியையும் இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முகமது ஷமியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் படாருதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், எந்த ஒரு அணியையும் இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முகமது ஷமியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் படாருதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இறுதிப்போட்டியிலும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் தொடர வேண்டும். அப்படி நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்வோம். ஆஸ்திரேலிய அணியும் வலுவாக உள்ளது. எந்த ஒரு அணியையும் நாம் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.