சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முடிவு இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியினை ஐசிசி சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறையை ஐசிசி சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய விதிமுறை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை முதல் கட்டமாக சோதனை முயற்சியில் கடைபிடிக்கப்படும். இரண்டு ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சாளர் எடுத்துக் கொள்ளும் நேரத்தினை கணக்கிட கடிகாரம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே சீர்குலைக்கும் மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின்

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு வருத்தம் இல்லை! பாஜக தேசிய தலைவர்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

