ஆசிய விளையாட்டு ஆடவர் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அணி, ஈரானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழத்தி இந்திய அணி தங்கம் வென்றது.
சுமார் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட பின் மீண்டும் தொடங்கிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக ஆசிய விளையாட்டு மகளிர் கபடி போட்டியிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.
மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 26-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழத்தி இந்திய அணி தங்கம் வென்றது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 28 தங்கம், 37 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் தொடர்ந்து பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.