உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி. 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி. இந்நிலையில் உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன், “அதிக ரன்களை குவித்து அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே எங்களது இலக்கு. ஐபிஎல்லில் நிறைய வீரர்கள் இங்கு விளையாடியுள்ளதால் இந்தியா எங்கள் சொந்த மைதானமாக முன்பு இருந்திருக்கிறது. அது எங்களுக்கு மிகவும் உதவும்” எனக் கூறியுள்ளார்.
5 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராஹிம் ஜார்டன் 16 ரன்களும் குர்பாஜ் 9 ரன்களும் எடுத்துள்ளார்கள்.