உலகக் கோப்பைத் தொடரில் அண்மையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 345 ரன்கள் என்ற இலக்கை துரத்திப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.
உலகக் கோப்பைத் தொடரின் 8-வது போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் துரத்திப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியால் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்தது. இதற்கு முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி துரத்திப் பிடித்த 328 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
உலகக் கோப்பையில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள் விவரம்:
அணி | துரத்தி பிடித்த இலக்கு | எதிரணி | ஆண்டு |
பாகிஸ்தான் | 345 ரன்கள் | இலங்கை | 2023 |
அயர்லாந்து | 328 ரன்கள் | இங்கிலாந்து | 2011 |
வங்கதேசம் | 322 ரன்கள் | மே.இ.தீவுகள் | 2019 |
வங்கதேசம் | 319 ரன்கள் | ஸ்காட்லாந்து | 2015 |
இலங்கை | 313 ரன்கள் | ஜிம்பாப்வே | 1992 |