ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

விதியை மீறி உணர்ச்சிவசப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்; கண்டித்த ஐசிசி!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது ஐசிசி விதிகளை மீறிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஐசிசி கண்டித்துள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2023, 6:30 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது ஐசிசி விதிகளை மீறிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஐசிசி கண்டித்துள்ளது.

உலகக் கோப்பையில் நேற்று முன் தினம் (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் ஐசிசியின் விதியை மீறியதாக ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸை ஐசிசி கண்டித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 19-வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது குர்பாஸ் ரன் அவுட் ஆனார். ஆட்டமிழந்த பிறகு குர்பாஸ் தனது பேட்டினைக் கொண்டு பவுண்டரி கோடுகளின் மீதும், அங்கிருந்த நாற்காலிகளின் மீதும் தாக்கியுள்ளார். ஐசிசி விதிமுறை 2.2-ன் படி சர்வதேச கிரிக்கெட்டில் கிரிக்கெட் சாதனங்களை அல்லது பொருட்களை சேதப்படுத்துவது விதிமுறை மீறலாகும். அதனால், ஐசிசி குர்பாஸைக் கண்டித்துள்ளது. தனது விதிமீறலை ஒப்புக்கொண்டதால் அவர் சட்டரீதியாக பதிலளிக்கத் தேவையில்லை. இருப்பினும், அவரது ஒழுங்கு நடவடிக்கைகளில் ஐசிசி ஒரு புள்ளியைக் குறைத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் ஐசிசி விதிமுறைகளை குர்பாஸ் மீறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.