புணே: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
புணேவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தத் தொடரில் இந்தியா 3 வெற்றியும், வங்கதேச அணி ஒரு வெற்றியும் பெற்றுள்ளது.