

இந்தியாவுக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
உலக்கோப்பை தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. லக்னௌவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுவரை நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. தொடா்ச்சியாக 4 தோல்விகளுடன் 9-ஆம் இடத்தில் உள்ளது இங்கிலாந்து.
நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி தொடா் தோல்விகளால் துவண்டுள்ளது. அதே நேரம், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் உற்சாகத்துடன் உள்ளது இந்திய அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.