புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஒரு வாரத்தில் உலகக் கோப்பை: அவசரமாக நாடு திரும்பும் தென்னாப்பிரிக்க கேப்டன்!

சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புகிறார்.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 10:43 am

சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புகிறார்.

உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தனது முதன்மையானப் போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. நாளை (செப்டம்பர் 29) நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியையும் தென்னாப்பிரிக்க அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். பயிற்சி ஆட்டங்களில் அணியை மார்கரம் வழிநடத்துவார். அக்டோபர் 7  ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டெம்பா பவுமா மீண்டும் அணியில் இணைவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.