இரண்டாவது முறையாக கோலிக்கு அபராதம்! 

ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலிக்கு இரண்டாவது முறையாக அபராதம் வித்தித்துள்ளது. 
இரண்டாவது முறையாக கோலிக்கு அபராதம்! 
Updated on
1 min read

ஆர்சிபி அணி மற்றும் விராட் கோலிக்கு இரண்டாவது முறையாக பிசிசிஐ அபராதம் வித்தித்துள்ளது. 

ஏப்.23ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டட நேரத்தில் பந்து வீசி முடிக்காததால் “ஸ்லோ ஓவர் ரேட்” என்ற விதியின்படி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் 20வது ஓவரில் 30யார்ட் வட்டத்தை தாண்டி 5 பேருக்கு பதிலாக 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

விராட் கோலிக்கு மட்டுமல்லாமல் அணியினர் உட்பட அனைவருக்கும் அபராதம். ரூ.6 இலட்சம் தர வேண்டும் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் இதில் எது குறைவானதோ அதை தர வேண்டும். 

இதற்லு முன்னர் லக்னௌ அணிக்கு எதிரான் அபோட்டியில் டு பிளெஸ்ஸி தலைமையில் ஆர்சிபி அணிக்கு ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலிக்கும் ஏற்கனவே எதிரணியினர் விக்கெட் இழப்பிற்கு ஆக்ரோஷமாக கொண்டாடியதிற்காக அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கேப்டனாக செயல்படும்போது அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com