தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

வைரஸ் காய்ச்சலால் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர்!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:39 pm IST

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் (ஆகஸ்ட் 30) தொடங்கியது. ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடரிலிந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆசியக் கோப்பை தொடருக்காக இலங்கை செல்லும் வங்கதேச அணியுடன் செல்லவில்லை. அவர் காய்ச்சலில் இருந்து குணமடையாததால்  ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டன் தாஸுக்கு பதிலாக வங்கதேச அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அனமுல் ஹாக் பிஜோய் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.