ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் கடும் போட்டியாளராக இருக்கும்: அஸ்வின்

ஆசியக் கோப்பையிலும், உலகக் கோப்பையிலும் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தான் அணி கடும் போட்டியாளராக இருக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 4:01 pm IST

ஆசியக் கோப்பையிலும், உலகக் கோப்பையிலும் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தான் அணி கடும் போட்டியாளராக இருக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம் மற்றும்  முகமது ரிஸ்வானின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களால் உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு பாகிஸ்தான் அணி ஆபத்தானதாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் எனத் தோன்றுகிறது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அவர்களது சிறப்பான தொடர்ந்து வெளிப்படுத்தினால், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாளராக மாறிவிடும். பாகிஸ்தான் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள், அவர்களை ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு கடும் போட்டியாளராக மாற்றியுள்ளது. அவர்களிடம் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் 90’களின் பிற்பகுதியிலும், 2000 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக இருந்தது. அந்த ஆதிக்கம் கடந்த 5-6 ஆண்டுகளாக  மீண்டும் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அவர்கள் அதிக அளவிலான டி20 தொடர்களில் விளையாடுகின்றனர். அவர்கள் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள். பிக் பேஸ் லீக் தொடர்களிலும் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றனர் என்றார்.

பாகிஸ்தான் மற்றும்  நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பையின் முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.