ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ புதன்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.
நிலவின் தென் துருவப் பகுதியில் ‘விக்ரம்’ லேண்டரும், ‘பிரக்யான்’ ரோவரும் தொடா்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் நிலவு சாா்ந்த புதிய தரவுகளை வழங்கி வருகின்றன. அது எதிா்காலத் திட்டங்களுக்குப் பெரும் பலன் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தை இஸ்ரோ செப்டம்பா் 2-ஆம் தேதி முற்பகல் 11.50-க்கு விண்ணில் செலுத்தவுள்ளது.

இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், வரும் சனிக்கிழமை ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க | சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு: இன்று வானில் தெரியும்!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


