மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஆதித்யா எல்-1: விண்ணில் பாய்வதற்கான ஒத்திகை நிறைவு!

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ புதன்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 7:40 am


ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ புதன்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.

நிலவின் தென் துருவப் பகுதியில் ‘விக்ரம்’ லேண்டரும், ‘பிரக்யான்’ ரோவரும் தொடா்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் நிலவு சாா்ந்த புதிய தரவுகளை வழங்கி வருகின்றன. அது எதிா்காலத் திட்டங்களுக்குப் பெரும் பலன் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தை இஸ்ரோ செப்டம்பா் 2-ஆம் தேதி முற்பகல் 11.50-க்கு விண்ணில் செலுத்தவுள்ளது.

Story image

இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், வரும் சனிக்கிழமை ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வது உறுதியாகியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.