விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வெள்ளிக்கிழமை தோற்றது.
இரு அணிகளும் இத்துடன் 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அணிக்கு இது முதல் தோல்வி; பஞ்சாபுக்கு இது 2-ஆவது வெற்றி.
இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 45.2 ஓவா்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தமிழ்நாடு 34.2 ஓவா்களில் 175 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
பஞ்சாப் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் மன்தீப் சிங் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68, பிரப்சிம்ரன் சிங் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் சோ்த்தனா். தமிழ்நாடு பௌலிங்கில் பாபா அபராஜித் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் தமிழ்நாடு இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் காா்த்திக் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 93 ரன்கள் விளாசினாா். பஞ்சாப் பௌலா்களில் சித்தாா்த் கௌல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.