ஐபிஎல் ஏலத்தில் தனது பெயர் வந்ததும் இதயத்துடிப்பு அதிகரித்ததாகவும், அதிகத் தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட தருணம் தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமைக்கும் நினைவிருக்கும் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அண்மையில் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் டேரில் மிட்செல் பெற்றார். அவருக்கு முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இதையும் படிக்க: சச்சினின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!
இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தனது பெயர் வந்ததும் இதயத்துடிப்பு அதிகரித்ததாகவும், அதிகத் தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட தருணம் தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமைக்கும் நினைவிருக்கும் எனவும் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நாள் எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிகவும் சிறப்பான நாள். நாங்கள் அனைவரும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு அமர்ந்து ஏலம் முழுவதையும் பார்த்துக் கொண்டிருந்தோம். எனது பெயர் தொலைக்காட்சியில் வந்ததும், நாங்கள் அனைவரும் கண் இமைக்காமல் ஏலத்தையே கவனித்து வந்தோம். ஏலத்தில் எனது பெயர் வந்தபோது இதயத் துடிப்பு அதிகரித்தது.
நேற்று எனது மகளின் பிறந்தநாள். எனது மூத்த மகளுக்கு அதிக அளவில் பரிசுகளை வாங்கி பரிசளித்தேன். அவளுக்கு எங்களது மகிழ்ச்சிக்கான காரணம் புரியவில்லை. ஆனால், மிகப் பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது எனது மகள்களின் எதிர்காலத்துக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும். மிகப் பெரிய தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட தருணம் எனது மீதமுள்ள வாழ்நாள் முழுமைக்கும் நினைவிருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்

ரூ.950 கோடி சம்பளம் வாங்கிய ஹாலிவுட் நடிகர்..! மார்வெல் திரைப்படங்களிலே அதிகம்!

மும்பையில் பல கோடி மதிப்பில் வீடு கட்டிய பூஜா ஹெக்டே!

ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தைப் பார்த்ததில்லை: மாணவர்களை விமர்சித்த கங்கனா!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



