சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்கார் முறியடித்துள்ளார்.
வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் முதலில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 20) நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்கார் அதிரடியாக 151 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம், புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார்.
இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து நியூசிலாந்தில் ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சௌமியா சர்கார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார். சௌமியா சர்காருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



