/

இந்து சமய அறநிலையத் துறையில் 2 ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம்!

இந்து சமய அறநிலையத் துறையில் 2 ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது பற்றி...

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Updated On :28 ஜூலை 2026, 5:28 pm IST

இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கா் நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு கூடுதல் ஆணையர் (மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்) பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், திருச்சி, திருப்பூர், நாகை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலமும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மண்டலங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர்கள் கூடுதல் ஆணையர்களாக பணியமர்த்தப்படவுள்ளனர்.

Summary

Two IAS posts created in the Hindu Religious and Charitable Endowments Department

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.