குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி தாயகம் திரும்பியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு சென்று பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி தாயகம் திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக விராட் கோலி இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு மீண்டும் அணியில் இணைந்துவிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணிநேரத்துக்கு வேலூர், 12 மாவட்டங்களில் மழை!

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



