மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது இலங்கை மகளிர் அணி.
கேப் டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இலங்கை கேப்டன் சமரி அத்தபத்து 50 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எந்த பேட்டராலும் 30 ரன்களைத் தொட முடியாத அளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசினார்கள் இலங்கை வீராங்கனைகள். இனோகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.