நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜடேஜா அபாரம்: ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த 9 ஆஸி. பேட்டர்கள்! 

தில்லி டெஸ்டில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 113 ரன்களுக்கு சுருட்டியது. 

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 11:36 am IST

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 262 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே கவாஜா ஜடேஜா பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசேன் சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்த ஜோடி வீழ்ந்தது ஆஸி. அணியே தடுமாறியது. ஹெட் 43 ரன்களும், லபுசேன் 35 ரன்களும் எடுத்தனர்.

Story image

மற்ற 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மித்-9, கவாஜா-6, ரென்ஷா-2, ஹேன்ஸ்கோம்ப்-0, அலெக்ஸ் கேரி-7, கம்மின்ஸ்-0, லயன் -8, மர்ஃபி-3, குஹென்மன் -0. 

ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 113 ரன்களுக்கு ஆஸி. அணி சுருண்டது. 114 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 

கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் மீண்டும் சொதப்பி விட்டார். 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ரோஹித், புஜார ஆடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.