நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிஎஸ்கேவுக்குப் பாதிப்பு?: அயர்லாந்து டெஸ்டில் பங்கேற்க ஸ்டோக்ஸ் முடிவு!

அயர்லாந்து டெஸ்டில்  பங்கேற்பேன் என இங்கிலாந்து கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 12:45 pm IST

அயர்லாந்து டெஸ்டில்  பங்கேற்பேன் என இங்கிலாந்து கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. மார்ச் 31 முதல் மே 28 வரை ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 1 அன்று டெஸ்டில் விளையாடவுள்ளது. அதன்பிறகு ஜூன் 16-ல் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ளது. அயர்லாந்து டெஸ்டில் பங்கேற்கவுள்ளதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் போட்டி முடியும் முன்பே அவர் இங்கிலாந்துக்குத் திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கடைசி ஆட்டங்களில் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் நான் விளையாடுவேன். போதுமான அவகாசத்தில் அணிக்கு மீண்டும் திரும்பி அந்த டெஸ்டில் விளையாடவுள்ளேன். (ஐபிஎல்-லில் விளையாடும்) மற்ற வீரர்களிடம் அவர்களுக்கு எது செளகரியம் என்று விசாரிப்பேன். ஆஷஸ் தொடரில் நல்ல உடற்தகுதியுடன் பங்கேற்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.