வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அப்படி எண்ணியிருந்தால் நான் ஐந்து டெஸ்டுகளில் தான் விளையாடியிருப்பேன்: ஸ்டார்க்

3-வது டெஸ்டில் விளையாடுவது குறித்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்.

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 1:33 pm IST

3-வது டெஸ்டில் விளையாடுவது குறித்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளை வென்று டெஸ்ட் தொடரில் முன்னணியில் உள்ளது இந்திய அணி. 3-வது டெஸ்ட், இந்தூரில் புதன் அன்று தொடங்குகிறது. 

காயம் காரணமாக முதல் இரு டெஸ்டுகளில் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் காயமடைந்ததால் இந்நிலை ஏற்பட்டது. காயம் காரணமாக முதல் இரு டெஸ்டுகளிலும் விளையாடாத ஸ்டார்க், கிரீன் ஆகிய இருவரும் 3-வது டெஸ்டில் விளையாடவுள்ளார்கள். இதையடுத்து 3-வது டெஸ்டில் விளையாடுவது பற்றி ஸ்டார்க் கூறியதாவது:

டெஸ்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அடைந்துள்ளேன். ஓரளவு அசெளகரியம் இருக்கவே செய்யும். சிறிது காலத்துக்கு 100% செளகரியம் இருக்காது. ஆனால் பந்துவீசும்போது நல்ல உணர்வை அடைகிறேன். உடற்தகுதியில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருகிறேன். ஓரளவு அசெளகரியத்துடன் விளையாடும் முதல் டெஸ்ட் அல்ல இது. உடலில் 100% எவ்வித வலியும், அசெளகரியமும் இல்லாமல் தான் விளையாட வேண்டும் என்றால் நான் இதுவரை ஐந்து அல்லது பத்து டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.