வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அதிக டெஸ்ட் ரன்கள்: நியூசிலாந்துக்குப் பெருமை சேர்க்கும் வில்லியம்சன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கேன் வில்லியம்சன்.

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 3:25 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கேன் வில்லியம்சன்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதமடித்துள்ளார் வில்லியம்சன். இதையடுத்து 7787 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு 7683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தா ராஸ் டெய்லர். அவரை விடவும் 35 இன்னிங்ஸ் குறைவாக விளையாடியுள்ளார் வில்லியம்சன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரி ரன்கள் (53.33) வைத்துள்ள நியூசிலாந்து வீரரும் வில்லியம்சன் தான். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார் வில்லியம்சன். 20-க்கும் அதிகமான டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள ஒரே நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையயும் கொண்டுள்ளார். அவருக்கு அடுத்ததாக டெய்லர் 19 சதங்கள் எடுத்துள்ளார். மேலும் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரரும் வில்லியம்சன் தான். 3930 ரன்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.