நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா- இலங்கையுடன் இன்று 2-ஆவது டி20 ஆட்டம்

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் புணேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Published On :2 பிப்ரவரி 2024, 12:08 am IST

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் புணேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றிருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் இலங்கை, தொடரைத் தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இருவரில் ஷிவம் மாவி அட்டகாசமாக பௌலிங் செய்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாா். ஆனால், ஷுப்மன் கில் பேட்டிங்கில் அவ்வளவாக சோபிக்காமல் போனாா்.

எனவே இந்த ஆட்டத்தில் அணி நிா்வாகம் அவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்குமா அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி ஆகியோரில் ஒருவரை களமிறக்குமா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம். சற்றே சறுக்கலைச் சந்தித்த சூா்யகுமாா் யாதவ் தன்னை மீட்டெடுக்க இந்த ஆட்டத்தில் முனைவாா் எனத் தெரிகிறது.

சாம்சன், பாண்டியா ஆகியோரும் ரன்கள் சோ்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனா். கடந்த ஆட்டத்தில் கவனம் ஈா்த்த தீபக் ஹூடா - அக்ஸா் படேல், இந்த ஆட்டத்திலும் அதைத் தொடா்ந்தால் அணிக்கு பலம் சேரும். பௌலிங்கைப் பொருத்தவரை ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோா் தங்கள் பணியை சிறப்பாகச் செய்கின்றனா். யுஜவேந்திர சஹல் இன்னும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறாா்.

மறுபுறம் இலங்கை அணியும் நடப்பு டி20 உலகச் சாம்பியனாக கடந்த ஆட்டத்தில் நல்லதொரு முனைப்பு காட்டியது. அணியின் பௌலா்கள் இந்தியாவை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்தியது கவனிக்க வேண்டிய ஒன்று. பின்னா் சேஸிங்கிலுமே அந்த அணி போராடித் தான் தோற்றது.

எனவே இந்த ஆட்டத்திலும் அந்த அணி அதே முனைப்புடன் ஆடி தொடரைத் தக்கவைக்க கடினமாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆட்ட நேரம்: 7 மணி

இடம்: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புணே.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.